சித்தர்களின் வரலாறு (Sitthargalin History)

 வணக்கம் நேயர்களே!

இந்த பதிவில் சித்தர்களின் வரலாறு  பற்றி பார்க்க இருக்கிறோம்.

சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள்.  சித்து  என்னும் சொல் 'சித்தம்' என்னும் சொல்லில் இருந்து தோன்றியது. சித்தத்தை வென்றவன் சித்தன் என்றும் அவனது அருளனுபவ நிலை 'சித்து' அல்லது 'சித்தி' என்றும் கூறலாம். சிவனுக்கு சித்தன் என்ற பெயரும் உண்டு..சிவனே ஆதி சித்தன் என்று  கூறுவர்.  சம்பந்தரால் பாடப்பெற்ற திருநறையூர் சித்தீஸ்வரம் என்று வழங்கப்பெறுகிறது . சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையில் உள்ள சிவன் கோவில் சித்தர் கோவில் என்று தான் அழைக்கப்படுகிறது. எனவே, சிவனை வழிபட்டவர்கள் 'சித்தரகள்' என்று அழைக்கப்பட்டனர்.

தமிழ் மண்ணின் பொக்கிஷங்களாக போற்றப்  பட வேண்டியவர்கள் சித்தர்கள்..உலகமே இன்று கொண்டாடும் யோகா கலையின் பிதாமகன்கள்...அதனால் சிவனை "ஆதியோகி" என்று கூறுகின்றனர்.. சித்தர்கள் யோக பலத்தால் செய்த சாகசங்களும், வாழ்ந்த காலங்களும் நம்மால் நம்ப முடியாத உண்மைகள்..

ஏன் சித்தர்கள் என்றால் அத்தனை முக்கியத்துவம். இவர்கள் , நம் பிறப்பின் நோக்கத்தை அறிவித்து, இறைவனிடம் இணைய வைக்க வந்த அவதார புருஷர்கள்...நம் கஷ்ட காலத்திலும் , கடவுள் மனம் இறங்கவில்லை  என்றாலும், நம் வேண்டுதலுக்கு சித்தர்கள் மனம் இ றங்குவார்கள்.

18 சித்தர்கள்:

சித்தர்களில்  'நவகோடி சித்தர்கள்' உண்டு என்று கூறுவார்கள்..அவர்களில் 18 சித்தர்களே முதன்மையானவர்கள்..அவர்களை பற்றி விரிவாக காண்போம். 

1.திருமூலர் 

2.போகர் 

3.கருவூரார் 

4.புலிப்பாணி 

5.கொங்கணர் 

6.அகப்பேய்சித்தர் 

7.சட்டைமுனி 

8.சுந்தரானந்தர் 

9. அகத்தியர் 

10.தேரையர்

11.கோரக்கர் 

12.பாம்பாட்டி சித்தர் 

13.சிவா வாக்கியர்

14.ரோமரிஷி 

15.காகபுசுண்டர் 

16.இடைக்காட்டு சித்தர் 

17.குதம்பை சித்தர் 

18.பதஞ்சலி முனிவர் 

திருமூலர்:
சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும்,நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர்..திருநந்தி தேவரின் மாணவர். அஷ்டமா  சித்திகள் அனைத்தும் கைவரப்  பெற்றவர் .(அஷ்ட என்றால் எட்டு என்று பொருள்), அஷ்டமா  சித்திகள் முறையே:
1. அணிமா 2. மகிமா 3. லகிமா 4. பிரார்த்தி 5. பிரகாமியம் 6. ஈசத்துவம், 7. வசித்துவம் 8. கரிமா
அகத்தியரிடம் கொண்ட அன்பால் , அவருடன் தங்குவதற்கு எண்ணி, கைலாய மலையில் இருந்து பொதிகை நோக்கி வந்தார்.வரும் வழியில், நேபாளம், காசி, திருவாலங்காடு , காஞ்சி, தில்லை என்று ஒவ்வொரு இடத்திலும் சிவனை தரிசித்து வந்தார்.இப்படி, திருவாடுதுறை இறைவனை வழிபாடு செல்லும் பொழுது, காவேரி கரையில் பசு கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார்.அதன் அருகில், ஆயனாகிய மூலன் என்பவன் தன விதி முடிந்து இறந்து கிடந்தான். அதைக் கண்டு பசுக்கள் கண்ணீர் விட்டன.பசுக்களின் துயர் துடைக்க சிவ யோகியர் எண்ணினார்...தன் உடலை மறைவான இடத்தில கிடத்திவிட்டு கூடு விட்டு கூடு பாய்தல் (பிரகாமியம்) என்னும் முறையில் தம் உயிரை அந்த இடையனது உடம்பினுள் செலுத்தி மூலனாய்  எழுந்தார். மூலன் எழுந்ததும் பசுக்கள் மகிழ்ந்து துள்ளி குதித்தன.  திருமமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தார். சாயங்காலம் ஆனதும் பசுக்கள், சாத்தனூரை நோக்கி நடந்து சென்றது ..மூலனும் பின் தொடர்ந்து சென்றார். சிவயோகியார், பசுக்கள் தத்தம் வீடுகளுக்கு செல்வதைக் கண்டார். அதே சமயம், மூலனின் மனைவியும் , மூலனின் வடிவில் இருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ, தான் அவள் கணவன் இல்லை என்றும், அவன் இறந்து விட்டான் என்றும் வீட்டிற்கு செல்ல மறுத்தார். மூலனின் மனைவியோ, பெரியவர்களை அழைத்து முறையிட்டு, கூறி அழுது நின்றாள். திருமூலர் அவர்களிடம், நடந்தை கூறி அந்த உடலில் இருந்து வெளியில் வந்து தான் ஒரு யோகி என்பதை நிரூபித்தார். பின், சிவயோகியர் தன உடலைத்  தேடி சென்று, அது கிடைக்காததால் மூலன் உடலிலேயே தங்கிவிட்டார். அதன்பின்பு , திரு என்னும் அடை மொழியே பெற்று "திருமூலர்" என்னும் பெயர் பெற்றார்.
பின்னார், திருவாடுதுறை திருக்கோயிலில் யோகா நிலையில் அமர்ந்து விட்டார். வருடத்திற்கு ஒரு முறை மட்டும் எழுந்து, ஒரு பாடலை பாடியருளினார் ..இவ்வாறு, ஓர் ஆண்டுக்கொரு பாடலாக மூவாயிரம் பாடலை பாடினார்.அதுவே திருமந்திரம் என்னும் நூல் ஆயிற்று . இது "தமிழ் மூவாயிரம்" என்றும் "தமிழ் மந்திரமாலை" என்றும் அழைக்கப்படுகிறது. பன்னிரு திருமுறைகளில் 10-ம் திருமறையாகவும் உள்ளது. இவரது வரலாற்றை சேக்கிழார் பெரியபுராணத்தில் விரிவாக குறிப்பட்டுள்ளார். திருமூலர் எழுதிய வேறு  நூல்கள் சில:
1. திருமூலர் காவியம் 
2. திருமூலர் சோதிடம் 
3.  திருமூலர் விதிநூல் 
4. திருமூலர்சல்லியம் 
5.  திருமூலர் பெருங்காவியம் 
6. திருமூலர் தீட்சை விதி 
7. திருமூலர் கோர்வை விதி 
திருமூலர் குறிப்பு:
திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்டம்  நட்சத்திரத்தில் பிறந்தார் என போகரின் சப்த காண்டம் குறிப்பிடுகிறது. இவர் வாழ்ந்த காலம் 5 ம் நூற்றாண்டு என்பர். 3000 ஆண்டுகள் வரை வாழ்ந்தார் என்று கூறுவார்கள். மூலம் நட்சத்திரத்தில்  முக்தி அடைந்தார்.
திருமூலர் ஜீவசமாதி: சிதம்பரம் 
திருமூலருக்கு திருநாரையூர்   கோவிலில் தனி சன்னதி உள்ளது. சாத்தனூரில் அவருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. திருமூலருக்கு 16 சீடர்கள் உண்டு என்பர்..அவர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலை சித்தரும் முக்கியமானவர்கள்.
பாண்டிய மன்னரின்  ஆணைப்படி, திருமூலர் சமாதியே மூலவராக கொண்டு, கருவூரார் சிதம்பரம் கோவிலை அமைத்தார் என்று கூறுகிறார்கள். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம், சுயம்பு லிங்கமாக கற்பிக்கப்பட்டு, உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சன்னதியும் இக்கோவிலில் சேர்த்து விட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் .
(தொடரும்...)
அடுத்த பதிவில் சித்தர் போகரைப்  பற்றி விரிவாக காண்பாம்.

Reference: PATHINAN SITTHARGAL VARALAARU BOOK BY N.kRISHNAMOORTHY

Comments

Popular posts from this blog

கன்னியாகுமரியின் மாயம்மா (Kanniyakumariyin Mayamma)